சந்த்ரகந்த ஹெர்பல் மருந்து இது சிறந்த முலிகை மருந்து இது சருமம் சம்பதமான நோய்களை. குணபடுத்தும் ஆற்றல் உடையது.இது கட்டி,சிரங்கு,அடிபட்ட புண்,சேற்றுபுன்,வீக்கம்,நரம்பு, சிலந்தி,ஆறாத பழையபுன்,பித்தவெடிப்பு,சர்க்கரை நோய்னால் ஏற்படும் புண் இவைகளுக்கு,சிறந்த மருந்துமாடுகளுக்கு ஏற்படும் கோமாரி புண் நோய்க்கு சிறந்த மருந்து சந்திரகாந்த முலிகை மருந்து பக்கவிளைவு இல்லாதது . email:chandrakanthaherbal@yahoo.com கிடைக்கும் இடம் திருவாரூர் பழனி விலாஸ் ஸ்டோர்

CHANDRAKANTHA HERBAL OIL

...

cricket live

சந்த்ரகந்த ஹெர்பல் மருந்து இது சிறந்த முலிகை மருந்து இது சருமம் சம்பதமான நோய்களை. குணபடுத்தும் ஆற்றல் உடையது.இது கட்டி,சிரங்கு,அடிபட்ட புண்,சேற்றுபுன்,வீக்கம்,நரம்பு, சிலந்தி,ஆறாத பழையபுன்,பித்தவெடிப்பு,சர்க்கரை நோய்னால் ஏற்படும் புண் இவைகளுக்கு,சிறந்த மருந்துமாடுகளுக்கு ஏற்படும் கோமாரி புண் நோய்க்கு சிறந்த மருந்து சந்திரகாந்த முலிகை மருந்து பக்கவிளைவு இல்லாதது . email:chandrakanthaherbal@yahoo.com கிடைக்கும் இடம் திருவாரூர் பழனி விலாஸ்

பக்கங்கள்

ONLINE TRADING

Chandrakantha Herbals's store

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கற்பூரவல்லி இலைச்சாறு.
  2. நல்லெண்ணெய்.
  3. சர்க்கரை.
செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.
Rating: 4.0/5 (32 votes cast)
          
 
 
  
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. மகிழம்பூ
  2. சுக்கு.
  3. சீரகம்.
  4. சோம்பு.
  5. ரோஜாப்பூ.
  6. ஏலக்காய்.
  7. அதிமதுரம்.
  8. சித்தரத்தை
  9. தேன்.
செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.
Rating: 4.2/5 (12 votes cast)
          
 
 
  
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. வேப்பம் பட்டை.
  2. கடுக்காய்
  3. கோரைக் கிழங்கு.
  4. நிலவேம்பு.
  5. தேன்.
செய்முறை:
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf/#sthash.bEwzzXTz.dpuf
மணலிக்கீரை:
  • மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
மலச்சிக்கல் குணமாக:
  • மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
ஞாபக சக்தி பெருக:
  • ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:
  • மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.
மூளை நரம்புகள் பலம்பெற:
  • மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.
ஈரல் பலம்பெற:
  • மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.
இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.
- See more at: http://www.grannytherapy.com/tam/#sthash.DPt3z77U.dpuf

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

தகரை விதையை எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு அரைத்து உடலில் பூசி வந்தால் உடலிலுள்ள தேமல் குறையும்.

அறிகுறிகள்:
  • தேமல்.
  • அரிப்பு.
  • புண்கள்.
தேவையான பொருட்கள்:
  1. தகரை விதை
  2. எலுமிச்சம் பழச்சாறு.
செய்முறை:
தகரை விதையை எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு அரைத்து உடலில் பூசி வந்தால் உடலிலுள்ள தேமல் குறையும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-2/%e0%ae%a4%e0%af%87%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/#sthash.Mnrji99v.dpuf
சுட்ட இலுப்பை அரப்பு எடுத்து தினமும் இருவேளை உடலில் தேய்த்துக் கழுவ வேண்டும். பின்பு நீரடிமுத்து, சந்தனம் ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு நோய்கள் குறையும்.
அறிகுறிகள்:
  • சொறி சிரங்கு.
  • புண்கள்.
தேவையான பொருட்கள்:
  1. சுட்ட இலுப்பை அரப்பு.
  2. நீரடிமுத்து
  3. சந்தனம்.
செய்முறை:
சுட்ட இலுப்பை அரப்பு எடுத்து தினமும் இருவேளை உடலில் தேய்த்துக் கழுவ வேண்டும். பின்பு நீரடிமுத்து, சந்தனம் ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு நோய்கள் குறையும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-2/%e0%ae%a4%e0%af%87%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/#sthash.Mnrji99v.dpuf
மருத்துவக் குணங்கள்:
  1. தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
  2. இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  3. பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
  4. துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
  5. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா?

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.

எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:

* சிறுநீர் பாதை தொற்றுநோய்
* உடலில் நீர் வறட்சி
* சிறுநீரக கற்கள்
* கல்லீரல் பிரச்சனை
* அல்சர்
* பிரசவத்திற்கு முன்னோ அல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது
* விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்
* பால்வினை நோய்
* பெரிதான புரோஸ்டேட்
* நீரிழிவு
* ஊட்டச்சத்துக் குறைவு
* குறுகிய சிறுநீர் பாதை
எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்:

* அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

* குருதிநெல்லிக் கனியின் (cranberry) ஜூஸை சாப்பிட வேண்டும். பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் மற்றும் குறுகிய சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.

* நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.

* தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். வேண்டுமென்றால் அத்துடன் வெல்லம் மற்றும் மல்லி தூளை சேர்த்து குடிக்கலாம். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

* ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.

* எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானதுதங்காமல் தடுக்கலாம்.

* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேறும். ஆகவே பீர் குடித்தால், அந்த கற்கள் கரைந்துவிடும். அதையே காலையில் குடித்தால், உடலில் வறட்சி ஏற்படும். ஆகவே அப்போது அத்துடன் தேங்காய் நீர் மற்றும் அதிக தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.

மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும்.
கபம் குறைய

Published June 18, 2012 | By sujatha
வேலிபருத்தி இலைச்சாறு, வசம்பு பொடி ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.


வேலிப்பருத்தி இலை

வசம்பு பொடி

வேலிப்பருத்தி இலை



அறிகுறிகள்:
சளி.
இருமல்.
காய்ச்சல்.
தேவையான பொருட்கள்:

வேலிப்பருத்தி இலை.
வசம்பு பொடி.
செய்முறை:
வேலிப்பருத்தி இலையை இடித்துச் சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு வசம்பை சுட்டு பொடி செய்துக் கொள்ளவேண்டும். வேலிபருத்தி இலைச்சாறு, வசம்புப் பொடி இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.

- See more at: http://www.grannytherapy.com/tam/category/தலை/சளி/#sthash.esOcuTS8.dpuf